Published : 12 Aug 2015 09:05 AM
Last Updated : 12 Aug 2015 09:05 AM
இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையில் செயல் அலுவலர் (கிரேடு-4) பதவியில் 23 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) கடந்த 2013 நவம்பர் 16 அன்று எழுத்துத் தேர்வையும் அதில் வெற்றி பெற்றவர்களுக்கு கடந்த ஜூன் 23, ஜூலை 7, 23-ம் தேதிகளில் நேர்முகத் தேர்வையும் நடத்தியது.
விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் பெற்ற மொத்த மதிப்பெண், இடஒதுக்கீடு அடிப்படையில் பணிக்கு தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் அடங்கிய தெரிவுப் பட்டியல் டிஎன்பிஎஸ்சி இணையதளத்திலும் (www.tnpsc.gov.in) அலுவலக அறிவிப்புப் பலகையிலும் வெளியிடப்பட்டுள்ளதாக செயலாளர் மா.விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT