Published : 24 Feb 2020 01:10 PM
Last Updated : 24 Feb 2020 01:10 PM

தமிழக ஐபிஎஸ் அதிகாரிகள் 3 பேருக்கு பதவி உயர்வு

சஞ்சய் மிட்டல், சஞ்சய் அரோரா, பாலநாகதேவி | கோப்புப் படம்.

தமிழகத்தில் 3 ஐபிஎஸ் அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை உள்துறைச் செயலர் எஸ்.கே.பிரபாகர் இன்று பிறப்பித்துள்ளார்.

தமிழக ஏடிஜிபி, ஐஜி பொறுப்பில் உள்ள 3 அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

மாற்றப்பட்டவர்கள் விவரம்:

* அயல் பணியில் சிஆர்பிஆஃப் ஏடிஜிபியாக டெல்லியில் பதவி வகிக்கும் சஞ்சய் அரோரா டிஜிபியாக பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.

* அயல் பணியில் தெலங்கானா மாநிலத்தில் ஹோம்கார்டு ஐஜியாகப் பணியாற்றும் பாலநாகதேவி ஏடிஜிபியாக பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.

* அயல் பணியில் நாடாளுமன்ற பாதுகாப்புப் பிரிவு இணைச்செயலாளர் மற்றும் ஐஜியாகப் பதவி வகிக்கும் சஞ்சய் மிட்டல் ஏடிஜிபியாக பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.

இவ்வாறு தனது உத்தரவில் உள்துறைச் செயலர் கே.எஸ்.பிரபாகர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x