Published : 21 Feb 2020 07:02 AM
Last Updated : 21 Feb 2020 07:02 AM

சென்ட்ரல் ரயில் நிலைய பிளாட்பார்ம் டிக்கெட் ரூ.15 ஆக உயர்வு

சென்னை

சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலைய பிளாட்பார்ம் டிக்கெட் விலையை ஏப்ரல், மே, ஜுன் ஆகிய 3 மாதங்கள் மட்டும் ரூ.10-ல் இருந்து ரூ.15-ஆக உயர்த்த தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.

சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பிளாட்பார்ம் டிக்கெட் விலை ரூ.10-ஆக உள்ளது. இதை ரூ.15-ஆக உயர்த்த தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. கோடை விடுமுறையில் வெளியூர் செல்பவர்களால் ரயில் நிலையம் பரபரப்பாக இருக்கும்.

இதனால் தேவையில்லாதவர்கள் நிலை யத்துக்குள் நுழைவதை தடுப்பதற்காக ஏப்ரல், மே, ஜுன் ஆகிய மூன்று மாதங்கள் மட்டும் பிளாட்பார்ம் டிக்கெட் ரூ.15-ஆக விற்பனை செய்யப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பிளாட்பார்ம் டிக்கெட் கவுன்ட்டர்கள் நடைமேடை எண் 1-லும் (வால்டாக்ஸ் சாலை அருகில்), 5-ம் எண் நுழைவு வாயில் அருகிலும் உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x