Published : 21 Feb 2020 07:01 AM
Last Updated : 21 Feb 2020 07:01 AM
தவில் இசை கலைஞர் டி.ஏ.கலியமூர்த்தி மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
திமுக தலைவர் மு.க.ஸ்டா லின்: தமிழிசைக் கருவியான தவில் இசையில் வல்லுநராக விளங்கிய கலைமாமணி திருவாளப்புத்தூர் டி.ஏ.கலியமூர்த்தி மறைவெய்திய செய்தி அறிந்து வேதனையடைகிறேன். என் திருமண விழாவில் கோடையிடி போல அவரது இசை முழங்கியது இன்னமும் செவிகளில் ஒலிக்கிறது.
திமுக தலைவர் கருணாநிதி முதல்வராக இருந்தபோது, கலியமூர்த்தியின் இசைத் திறமையைப் பாராட்டும் வகையில் கலைமாமணி விருது அளித்து சிறப்பித்தார். திருவாளப்புத்தூர் டி.ஏ.கலியமூர்த்தி அவர்களின் மறைவுக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரதுஇறப்பால் துயர்படும் குடும்பத்தினர், நண்பர்கள், இசைக் கலைஞர்கள் அனைவருக்கும்என் ஆறுதலை உரித்தாக்குகிறேன்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: பிரபல தவில் இசைக் கலைஞர் டி.ஏ. கலியமூர்த்தி காலமானார் என்ற செய்தி மிகவும் வருத்தம் அளிக்கிறது.
நாகை மாவட்டம் மயிலாடு துறை அடுத்த, திருவாளப்புத் தூரைச் சேர்ந்த இவர் தவில் இசையில் தனக்கென்று ஒரு தனி இடம் பிடித்தவர். தவில் இசையில் குரு என அழைக் கப்படும் அளவுக்கு தவில்இசையின் மூலம் இசைக் கலைஞர்கள் மத்தியில் மட்டுமல்ல, இசைஆர்வலர்கள் மத்தியிலும் பிரபல மானவர்.
தவில் இசைக் கலையில் சிறந்துவிளங்கியதால் தமிழக அரசின்கலைமாமணி விருது, மத்திய அரசின் சங்கீத நாடக அகாதெமி விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்ற பாராட்டுக்குரியவர். அவரதுமறைவு ஒட்டுமொத்த இசைஉலகுக்கே பேரிழப்பாகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT