Published : 17 Feb 2020 08:41 PM
Last Updated : 17 Feb 2020 08:41 PM
அதிமுக அமைச்சர்களில் பெரும்பாலானவர்கள் தங்கள் மாவட்டத்தில் இருக்கும் திமுக எம்எல்ஏ-க்களை கண்ணும் கருத்துமாய் கவனித்துக் கொள்கிறார்கள். திண்டுக்கல் மாவட்டத்தில் திமுக எம்எல்ஏ-க்கள் தான் பெரும்பான்மை என்பதாலும், அதில், ஐ.பெரியசாமி, சக்கரபாணி உள்ளிட்ட பெருங்கைகள் இருப்பதாலும் அநியாயத்துக்கு கரிசனம் காட்டுகிறாராம் மாவட்ட அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்.
சமீபத்தில் திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் வளர்ச்சி மன்றக் கூட்டம் நடந்தது. இதில் வரவேற்புரை நல்கிய குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி ஒருவர் வெள்ளந்தியாக, “ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஐ.பெரியசாமி அவர்களே...” என்று சொல்லிவிட்டாராம். இதைக் கேட்டதும் எகிறிக் குதித்த திண்டுக்கல்லார், “ஏன்யா... அவரோட வயசு என்ன... சீனியாரிட்டி என்ன... அவரை இப்டித்தான் பேர் சொல்லிக் கூப்பிடுவியா?” என்று பகிரங்கமாகவே கண்டிக்க, அதிகாரிகள் உள்ளிட்ட அத்தனை பேருமே திகைத்துப் போனார்களாம்
- காமதேனு இதழிலிருந்து (பிப்ரவரி 23, 2020)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT