Published : 16 Feb 2020 04:47 PM
Last Updated : 16 Feb 2020 04:47 PM
நடிகர் ரஜினிகாந்த் போகும் பாதையை பார்க்கும் போது அவர் பாஜகவின் நிழலாக செயல்படுகிறார் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் புதுவை மாநில முதல்வர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:
குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து வன்முறை நடக்கவில்லை. அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அந்த ஆர்ப்பாட்டத்தை சீர்குலைக்க சில சக்திகள் உள்ளே நுழைந்துள்ளது.
டெல்லி ஜாமியா பல்கலைக்கழகத்தில் தாக்குதல் நடத்தியவர்களை இதுவரை கைது செய்யப்படவில்லை. சென்னை வண்ணாரப்பேட்டையில் அமைதியாக போராட்டம் நடத்தியவர்களை இரவு போலீசார் அடித்து துன்புறுத்திய சம்பவத்தினால் தமிழக முழுவதும் போராட்டம் நடக்கிறது.
மத்திய அரசு சட்டத்தை சரி செய்யாமல் போராட்டத்தை ஒடுக்க பல சக்திகளை பயன்படுத்துகிறது. ஜனநாயக நாட்டில் ஒரு கருத்துக்கு மாற்று கருத்து சொல்ல ஒருவருக்கு உரிமை உண்டு. அதை தடுப்பது ஜனநாயகம் அல்ல. இதனை சர்வாதிகாரம் என்று நீதிபதியே கூறியுள்ளார்.
மக்களை திசை திருப்பினால் மோடியும், அமித்ஷாவும் மக்கள் பல பிரச்சினைகளை மறந்து விடுவார்கள் என்று நினைக்கின்றனர். ஆனால் மக்கள் எந்த பிரச்சினைகளை மறக்க மாட்டார்கள். நாட்டிற்கு விரைவில் விடிவு காலம் வரும்.
நடிகர் ரஜினிகாந்த் போகும் பாதையை பார்க்கும் போது அவர் பாஜகவின் நிழலாக செயல்படுகிறார்.
இவ்வாறு நாராயணசாமி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT