Published : 15 Feb 2020 05:35 PM
Last Updated : 15 Feb 2020 05:35 PM

அதிமுக மாவட்ட நிர்வாகிகளுடன் இபிஎஸ்-ஓபிஎஸ் ஆலோசனை

அதிமுக வளர்ச்சிப் பணிகள் மற்றும் தேர்தல் பணிகள் குறித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பல்வேறு மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

மாவட்ட நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டங்கள், கடந்த 10-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை நடைபெறும் என அதிமுக தலைமைக் கழகம் அறிவித்திருந்தது. இதில், முதல் இரு நாட்களுக்கு மட்டும் கூட்டங்கள் நடைபெற்றன. ஆனால், கடந்த 14-ம் தேதி பட்ஜெட் தாக்கல் காரணமாக, அடுத்த நாட்களில் கூட்டங்கள் ஒத்தி வைக்கப்பட்டன.

இந்நிலையில், நேற்று தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், மாவட்ட நிர்வாகிகளுடனான கூட்டம் மீண்டும் தொடங்கியது. அதன்படி, இன்று (பிப்.15) காலை, காஞ்சிபுரம், நெல்லை, வேலூர் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெற்றது.

அப்போது, அந்தந்த மாவட்டங்களின் உட்கட்சி விவகாரங்கள், வரவிருக்கும் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி தேர்தலை எதிர்கொள்வது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

தேர்தலில் சிறப்பாக பணியாற்றி வெற்றி பெறுவது குறித்த அறிவுறுத்தல்கள் மாவட்ட நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்டன. பிற்பகலில், சென்னை மற்றும் விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தவறவிடாதீர்

அனைவரும் அமைதி காப்போம்: முஸ்லிம் லீக் வேண்டுகோள்

முஸ்லிம்கள் மீது சிறு துரும்பும் படாமல் அதிமுக அரசு பாதுகாக்கிறது: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x