Published : 15 Feb 2020 07:50 AM
Last Updated : 15 Feb 2020 07:50 AM

சென்னை குடிநீர் வாரியம் உலகத் தரம் வாய்ந்ததாக உயர்த்தப்படும்: 24 மணிநேரமும் குடிநீர் வழங்க நடவடிக்கை

சென்னை

சென்னை மாநகரம் தொடர்ந்து நிலைக்கத் தக்க பொருளாதார வளர்ச்சி பெறுவதை உறுதி செய்வதற்கு, அரசின் ஒரு முக்கிய முயற்சியாக ‘சென்னை மாநகர கூட்டாண்மை' எனும் திட்டம் செயல்படுத்தப்படும்.

அதன் மூலம் சென்னை மாநகரம் முழுவதும் படிப்படியாக 24 மணி நேரமும் குடிநீர் வழங்குதல், சென்னை குடிநீர் வாரியத்தை உலகத் தரம் வாய்ந்த சேவை நிறுவனமாக தரம் உயர்த்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும்.

பாதாள சாக்கடை திட்டம் விரிவாக்கம்

சென்னைக்யில் குடிநீர் வீணாவதை தடுப்பதற்கு குடிநீர் வழங்கும் அமைப்பை மேம்படுத்த வேண்டியது அவசரத் தேவையாகும். பாதாளசாக்கடைத் திட்டம், சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதிகளுக்கும் விரிவுபடுத்தும் அவசியம் உள்ளது.

நாளொன்றுக்கு 260 மில்லியன் லிட்டர் அளவு கழிவுநீர் சுத்திகரிக்கக்கூடிய திறன் ஏற்படுத்தப்பட வேண்டும். இத்தேவைகளை நிறைவு செய்ய ரூ.4,500 கோடியில் சுற்றுச்சூழல் நிலைத் தன்மை, நகர்ப்புற குடிநீர் வழங்கல் மற்றும் சுகாதார திட்டம் தயாரிக்கப்பட்டு அதற்கு ஆசிய உட்கட்டமைப்பு வளர்ச்சி வங்கி நிதி கோரப்பட்டுள்ளது.

2024-ம் ஆண்டுக்குள் அனைத்து கிராமப் பகுதிகளில் உள்ள வீடுகளுக்கும் குழாய் இணைப்புகள் மூலம் போதுமான அளவு தரமான குடிநீர் வழங்குவதற்காக மத்திய அரசு ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தை அறிவித்துள்ளது.

இத்திட்டத்தின் கீழ், அனைத்து கிராம குடியிருப்புகளுக்கும் குடிநீர் வழங்கும் செயல்திட்டத்தை தமிழக அரசு வடிவமைக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x