Published : 14 Feb 2020 08:11 AM
Last Updated : 14 Feb 2020 08:11 AM
முத்தமிழறிஞர் கலைஞர் வாசகர் வட்டம் சார்பில் ‘வரலாற்றில் வாழும்கலைஞர் காலம்-1924' என்ற தலைப்பில் சொற்பொழிவு சென்னையில் நாளை (பிப்.15) நடைபெறுகிறது.
தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் எனும் சக்கரத்தை தன்னை சுற்றியேசுழலவைத்த அரசியல் சாணக்கியராக திகழ்ந்தவர் கருணாநிதி. இவரது சாதனைகளைப் போற்றும் வகையில் முத்தமிழறிஞர் கலைஞர் வாசகர் வட்டம் சார்பில் ‘வரலாற்றில் வாழும் கலைஞர் காலம்' சொற்பொழிவு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சி, தேனாம்பேட்டையில் உள்ள திமுக இளைஞரணி அலுவலகம் அன்பகத்தில் உள்ளஅண்ணா அரங்கத்தில் நாளை மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் ஜெ.அன்பழகன் எம்எல்ஏ பங்கேற்று சொற்பொழிவை தொடங்கிவைக்க உள்ளார். பேச்சாளர் நாஞ்சில் சம்பத் பங்கேற்று, ‘வரலாற்றில் வாழும் கலைஞர் காலம் - 1924’ எனும் தலைப்பில் உரையாற்ற உள்ளார். மேலும் எம்பிக்கள் ஆர்.எஸ்.பாரதி, தயாநிதிமாறன் ஆகியோர் வாழ்த்துரை வழங்க உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT