Published : 12 Feb 2020 04:12 PM
Last Updated : 12 Feb 2020 04:12 PM

பராமரிப்புப் பணிகளுக்காக பழநியில் நாளை ரோப்கார் சேவை நிறுத்தம்

மாதாந்திர பராமரிப்பு பணியின் காரணமாக பழநியில் நாளை (பிப்.13) ரோப்கார் சேவை நிறுத்தப்படுவதாக திருக்கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணிசுவாமி மலைக்கோயிலுக்கு செல்ல படிப்பாதை, இழுவை ரயில், ரோப் கார் ஆகியவற்றை பக்தர்கள் பயன்படுத்துகின்றனர்.

இழுவை ரயிலில் ஏழு நிமிடங்களிலும், ரோப் காரில் மூன்று நிமிடங்களிலும் மலைக்கோயிலை அடையலாம். இதனால் ரோப் காரில் அதிகளவில் பக்தர்கள் பயணிக்க ஆர்வம் காட்டுகின்றனர்.

மாதந்தோறும் ரோப் கார் பராமரிப்புப் பணிக்காக நிறுத்தப்படுகிறது.

பராமரிப்புப் பணியின்போது ரோப் காரை இயக்கும் மோட்டார், பற்சக்கரங்கள், பேரிங்குகள், ஷாப்டுகள், புஷ்கள் என அனைத்து பாகங்களும் சோதனை செய்யப்படும். இதுதவிர இரும்பு கம்பிவட கேபிள்கள் திறன் சோதிக்கப்படுகிறது.

பின்னர் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு மீண்டும் பக்தர்களுக்காக இயக்கப்படும். அதன்படி நாளை ஒருநாள் ரோப்கார் சேவை நிறுத்தப்படுவதாக திருக்கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x