Published : 11 Feb 2020 07:40 PM
Last Updated : 11 Feb 2020 07:40 PM
திமுகவுக்கு தேர்தல் வியூகம் வகுக்கும் பொறுப்பை பிரசாந்த் கிஷோர் ஏற்றிருப்பது அந்தக் கட்சியிலுள்ள பல மூத்த தலைகளின் தூக்கத்துக்கு வேட்டு வைத்திருக்கிறது. இப்போதைக்கு திமுகவில் முக்கிய முடிவுகள் அனைத்துமே துர்கா ஸ்டாலினின் விருப்பப்படியே எடுக்கப்படுவதாக ஒரு செய்தி. துர்காவோ எ.வ.வேலு சொல்வதைத்தான் கேட்கிறாராம். இதுவும் போதாதுக்கு, துர்காவின் தங்கை ஜெயந்தியும் இப்போது கிச்சன் கேபினெட் அரசியல் செய்கிறாராம். இந்த நிலையில், பிரசாந்த் கிஷோர் டீமும் உள்ளே வருகிறது. கட்சிக்குள் யாரையெல்லாம் கட்டம் கட்ட வேண்டும் என திமுக தலைமை ஸ்கெட்ச் போடுகிறதோ அவர்கள் எல்லாம் இனி ஒவ்வொருவராக கழற்றிவிடப்படுவார்களாம். யாராவது காரணம் கேட்டால், “பிரசாந்த் கிஷோர் டீம் தந்த ரிப்போர்ட் படிதான் இந்த நடவடிக்கை” என்று தயக்கமில்லாமல் சொல்லப் போகிறார்களாம்.
- ’காமதேனு’ இதழிலிருந்து... (பிப்ரவரி 16,2020)
தவறவிடாதீர்
கால்நடைத் துறை தேர்வு சென்னையில் மட்டுமே நடக்கும்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT