Published : 09 Feb 2020 10:50 AM
Last Updated : 09 Feb 2020 10:50 AM

எஸ்.ஐ. கொலையில் மேலும் ஒருவர் கேரளாவில் கைது

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச்சாவடியில் கடந்த மாதம் 8-ம் தேதி இரவு பணியில் இருந்த சிறப்பு எஸ்.ஐ. வில்சன் கொலை செய்யப்பட்டார்.

இதுதொடர்பாக, குமரி மாவட்டம் திருவிதாங்கோட்டை சேர்ந்த அப்துல் ஷமீம், இளங்கடையைச் சேர்ந்த தவுபீக் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களுக்கு கேரள மாநிலம்நெய்யாற்றின் கரையில் வாடகைக்கு வீடு எடுத்து கொடுத்தும், அவர்கள் தப்பிச் செல்லவும்,திருவனந்தபுரம் விதுரா பகுதியைச் சேர்ந்த செய்யது அலி என்பவர் உதவியது தெரியவந்தது.

தனிப்படை போலீஸார் நேற்றுமுன்தினம் திருவனந்தபுரத்தில் அவரை கைது செய்தனர். நாகர்கோவிலுக்கு நேற்று அழைத்து வரப்பட்ட அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x