Published : 05 Aug 2015 09:07 AM
Last Updated : 05 Aug 2015 09:07 AM

மதுவுக்கு எதிராக போராடும் மாணவிக்கு வீட்டுச் சிறை

மதுரை சட்டக் கல்லூரி மாணவி நந்தினி. இவர் கடந்த 2010-ம் ஆண்டு முதல் மதுவுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட் டுள்ளார். இதனால் மாணவி நந்தினி 32 முறை கைதாகியுள்ளார்.

தற்போது தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. இந்நிலையில், மதுரை புதூரில் உள்ள இவரது வீட்டுக்கு நேற்று அதிகாலை 4 மணிக்குச் சென்ற போலீஸார் முன்னெச்சரிக்கை நடவடிக்கை யாக நந்தினியையும், இவரது தந்தையையும் கைது செய்வதா கக் கூறினர். கைதாக மறுத்த அவர்கள் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டனர்.

தடையை மீறி, நந்தினி காலை 8 மணி அளவில் உண்ணா விரதம் இருக்க முயன்றார். இருவரையும் கோ.புதூர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

மாணவி நந்தினி கூறும்போது, “போதைப் பொருட்களை விற் பது 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கும் அளவுக்கு குற்றம் என்று இந்திய தண்டனை சட்டம் 328 கூறுகிறது. ஆனால், அரசாங்கமே அந்தக் குற்றத்தைச் செய்கிறது.

இதை கைவிடச் சொன்னால், அரசின் கொள்கை முடிவு என்கிறார்கள். ஒரு அரசின் கொள்கை முடிவை எடுப்பது, முதல்வர் உட்பட அமைச்சரவைதான். எனவே, இந்த முடிவை செயல்படுத்தும் முதல்வர் ஜெயலலிதா, மது விலக்கு ஆயத்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் ஆகி யோர் மீது ஐ.பி.சி. 328-ன் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று டிஜிபி அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளேன். இதுவரை நடவடிக்கை இல்லை”என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x