

சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு ஹெல்மெட் அணிவது தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி எம்.எல்.ஏ ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகன பேரணி மேற்கொண்டார்.
தமிழகத்தில் சாலை பாதுகாப்பு வாரம் கடைபிடிக்கப்படுகிறது. சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் தமிழக அரசின் போக்குவரத்து துறை காவல்துறை மற்றும் தொண்டு நிறுவனங்கள் மூலம் ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பகுதியில் 300-க்கும் மேற்பட்டோர் இருசக்கர வாகனத்தில் பேரணி மேற்கொண்டனர்.
திருப்பரங்குன்றம், மூலக்கரை, பசுமலை வழியாக பழங்காநத்தம் வரை ஊர்வலமாக சென்றனர் .
இந்நிகழ்ச்சியை திருப்பரங்குன்றம் காவல் நிலைய ஆய்வாளர் மதன கலா கொடியசைத்து துவக்கி வைத்தார். திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் சாவணன் ஹெல்மட் அணிந்து இரு சக்கர வாகனத்தில் விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டார் .