குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி?

குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி?
Updated on
1 min read

‘துக்ளக்’ பத்திரிகை ஆசிரியர் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயன்ற நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

சென்னை மயிலாப்பூர் தியாகராஜபுரத்தில் உள்ள வீட்டில் குருமூர்த்தி குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

நேற்று அதிகாலை 3.15 மணி அளவில் குருமூர்த்தி வீடு உள்ள தெருவில் 3 பைக்குகளில் 6 பேர் சந்தேகத்துக்குரிய வகையில் வந்துள்ளனர். குருமூர்த்தி வீட்டில் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டிருந்த ஆயுதப்படை காவலர் மணிகண்டன் இதை கவனித்துள்ளார்.

அப்போது, பைக்கில் வந்தவர்களில் ஒருவர் மஞ்சள் பையில் இருந்து பெட்ரோல் குண்டை எடுத்து வீச முயன்றுள்ளார். இதைப் பார்த்த காவலர் மணிகண்டன் அவர்களைப் பிடிக்க முயன்றுள்ளார். ஆனால், அதற்குள் அவர்கள் தப்பிச் சென்றுவிட்டனர்.

இது தொடர்பாக மணிகண்டன் அளித்த புகாரின்பேரில் மயிலாப்பூர் போலீஸார் வழக்குபதிவு செய்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in