தமிழகம், புதுவையில் 24 மணிநேரத்திற்கு வறண்ட வானிலை: சென்னை வானிலை ஆய்வு மையம்

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணிநேரத்திற்கு பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலையே நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (ஜன.21) வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகம் மற்றும் புதுவையில் காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் நிலவும் என்றும், திருச்சி, மதுரை, கோவை, சேலம் உள்ளிட்ட மலைப்பாங்கான பகுதிகளில் அதிகாலை நேரங்களில் அதிக பனிமூட்டம் நிலவும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஜன.22, 23 ஆகிய தேதிகளில் தென் தமிழக கடலோர பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் நிலவும் என்றும் கூறப்பட்டுள்ளது. நகரில் அதிகபட்சமாக 31 டிகிரி செல்சியஸும், குறைந்தபட்சமாக 22 டிகிரி டெல்சியஸும் வெப்பநிலை பதிவாகும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in