Last Updated : 20 Jan, 2020 04:13 PM

 

Published : 20 Jan 2020 04:13 PM
Last Updated : 20 Jan 2020 04:13 PM

வத்திராயிருப்பு ஒன்றியத் தலைவர் தேர்தல் முடிவுகளை அறிவிக்கக் கோரி திமுக கூட்டணிக் கட்சிகள் ஆர்ப்பாட்டம்

நடந்து முடிந்த வத்திராயிருப்பு ஒன்றியத் தலைவர் தேர்தல் முடிவுகளை அறிவிக்கக் கோரி இன்று (ஜன.20) காலை திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில் வத்திராயிருப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தமுள்ள 13 ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் அதிமுக 6 இடங்களையும், திமுக கூட்டணி 6 இடங்களையும், சுயேட்சை ஓரிடத்தை வென்றது.

கடந்த 11-ம் தேதி நடைபெற்ற ஊராட்சி ஒன்றியக் குழு தலைவருக்கான மறைமுகத் தேர்தலில் திமுக 7 ஓட்டுகள் வாங்கியதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்குள் புகுந்த சிலர் அலுவலகத்தில் உள்ள பொருட்களைச் சூறையாடியதால் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக தேர்தல் அதிகாரி அறிவித்தார்.

இந்நிலையில், தேர்தல் முடிவுகளை உடனே அறிவிக்கக்கோரி வத்திராயிருப்பு முத்தாலம்மன் திடல் பகுதியில் திமுக , சிபிஐ, சிபிஎம், காங்கிரஸ், மதிமுக, விசிக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட 300-க்கும் மேற்பட்டோர் பேரணியாகச் சென்று வருவாய் துறை அதிகாரிகளிடம் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x