கலிங்கப்பட்டியில் மதுக்கடைக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு

கலிங்கப்பட்டியில் மதுக்கடைக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு
Updated on
1 min read

கலிங்கப்பட்டியில் டாஸ்மாக் மதுக்கடை செயல்படுவதற்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. இந்த மனுவுக்கு உள்துறை செயலர், நெல்லை ஆட்சியர் பதில் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

நெல்லை மாவட்டம், கலிங்கப் பட்டியில் செயல்படும் டாஸ்மாக் மதுக்கடையை மூட உத்தரவிடக் கோரி மதிமுக பொதுச் செயலர் வைகோவின் சகோதரரும் கலிங் கப்பட்டி ஊராட்சித் தலைவருமான வி.ரவிச்சந்திரன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொது நல மனு தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:

ஊராட்சியில் தீர்மானம்

கலிங்கப்பட்டியில் டாஸ்மாக் கடை அமைக்க முடிவு செய்த போது, அமைக்கக்கூடாது என ஊராட்சியில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. இக்கடையால் கிராமத்தைச் சேர்ந்த பெண் கள், பள்ளி மாணவ, மாணவி யர் அதிகமாகப் பாதிக்கப்படுகின் றனர். எனவே, கலிங்கப்பட்டியில் டாஸ்மாக் மதுக்கடை செயல்படத் தடை விதிக்க வேண்டும். அக் கடையை மூட உத்தரவிட வேண் டும் எனக் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுதாகர், வி.எம்.வேலுமணி ஆகி யோர் கொண்ட அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வழக்கறிஞர் வாதிடும் போது, கலிங்கப்பட்டி டாஸ்மாக் கடையால் பொது மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இதனால் அக்கடை செயல்பட தடை விதிக்க வேண்டும் என்றனர்.

டாஸ்மாக் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முனியசாமி வாதிடும் போது கூறியது:

கலிங்கப்பட்டியில் 12 ஆண்டு களாக டாஸ்மாக் செயல்பட்டு வருகிறது. அரசியல் உள்நோக்கம் காரணமாக இப்போது டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என மனுதாரர் கூறுகிறார். குடிப்பது ஒரு சமுதாயத்தில் உள்ள பெரிய பிரச்சினையாகும். மக்கள் மனதில் மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே குடிப்பது குறையும். தேனூர், குன்றக்குடி கிராமங்களில் மக்கள் மது அருந்துவதில்லை.

மாநில அரசுக்கு நிர்பந்தம் அளிப்பதற்காகப் போராட்டத்தை நடத்துகின்றனர். மனுதாரர் மதிமுக பொதுச் செயலர் வைகோவின் சொந்த சகோதரர். வைகோவின் குடும்பத்தினர் புகையிலை பொருள்களை விற்பனை செய்யும் ஏஜெண்டாக உள்ளனர். இவர்கள் மதுவுக்கு எதிராகப் போராடுவது வியப்பாக உள்ளது என்றார்.

இதற்கு மனுதாரரின் வழக்கறி ஞர்கள் ஆட்சேபம் தெரிவித்தனர்.

விசாரணை ஒத்திவைப்பு

இதையடுத்து, பதில் மனு தாக்கல் செய்ய உள்துறை செயலர், நெல்லை மாவட்ட ஆட்சியர், நெல்லை மாவட்ட டாஸ்மாக் மேலாளர் ஆகியோ ருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை வரும் 13-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in