Published : 17 Jan 2020 05:03 PM
Last Updated : 17 Jan 2020 05:03 PM

தேசிய ஒற்றுமைக்கான சர்தார் படேல் விருது: மத்திய அரசு அறிவிப்பு

தேசிய ஒற்றுமைக்கான சர்தார் படேல் விருதுக்கான விண்ணப்பம் குறித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் பெயரில் இந்த விருதை மத்திய அரசு நிறுவியுள்ளது. தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை மேம்படுத்துவதற்கு குறிப்பிடத்தக்க, அனைவரையும் ஊக்கப்படுத்தக் கூடிய பங்களிப்புக்கும், வலுவான, ஒற்றுமையான இந்தியாவின் நெறிகளை வலுப்படுத்தும் பணிகளுக்கும் அங்கீகாரம் அளிப்பதை இந்த விருது நோக்கமாகக் கொண்டுள்ளது.

2020-ஆம் ஆண்டுகான சர்தார் படேல் தேசிய ஒற்றுமை விருதுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் நடைமுறை தற்போது தொடங்கியுள்ளது. இந்த விருதுக்கு ஏப்ரல் 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

குறிப்பாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் https://nationalunityawards.mha.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பங்களை அனுப்பலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x