நிபந்தனை ஜாமீனில் வெளிவந்த நெல்லை கண்ணன் காவல் நிலையத்தில் கையெழுத்து

நிபந்தனை ஜாமீனில் வெளிவந்த நெல்லை கண்ணன் காவல் நிலையத்தில் கையெழுத்து

Published on

பிரதமர், உள்துறை அமைச்சர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்த வழக்கில் கைது செய்யபட்டு நிபந்தனை ஜாமீனில் வெளிவந்த நெல்லை கண்ணன் மேலப்பாளையம் காவல்நிலையத்தில் கையெழுத்திட்டார்.

முன்னதாக, மேலப்பாளையத்தில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக கடந்த 29-ம் தேதி பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. அதில் சிறப்பு பேச்சாளராக பங்கேற்ற நெல்லை கண்ணன், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்ததாக அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் மேலப்பாளையம் போலீஸார் வழக்குபதிவு செய்தனர்.

கடந்த 1-ம் தேதி நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை வரும் 13-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டதை அடுத்து சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

கடந்த ஜனவரி 10-ம் தேதி நெல்லை மாவட்ட அமர்வு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in