Published : 12 Jan 2020 02:13 PM
Last Updated : 12 Jan 2020 02:13 PM
இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குரியுரிமை வாங்கித் தருவதாக அதிமுக அரசு தெரிவித்ததையடுத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தன் விமர்சனத்தை தன் முகநூல் வாயிலாக பதிவு செய்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
இலங்கைத் தமிழர்க்கு குடியுரிமை வழங்க மறுக்கும் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்துவிட்டு, அவர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வாங்கித் தரப் போவதாக நாடகம் ஆடிவருகிறது அதிமுக அரசு. இந்த கயமை நாடகத்தை சென்னைப் பல்கலைக் கழக குற்றவியல் துறையின் மூத்த ஆய்வாளர் பேராசிரியர் இரா.இளம்பரிதி அம்பலப்படுத்தி உள்ளார்.
இலங்கைத் தமிழர்க்கு இரட்டைக் குடியுரிமை பெற்றுத் தருவோம் என்ற அதிமுக அரசின் பொய் வாக்குறுதிக்கு மிகப் பெரிய முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்ட ஊடகங்கள், இந்தப் பேராசிரியரின் உண்மை அறிக்கையை முழுமையாக வெளியிட முன்வருமா?
என்று கூறியுள்ளார் ஸ்டாலின்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT