சேலம் மாவட்ட ஊராட்சிக் குழு தலைவராக பாமக வேட்பாளர் தேர்வு

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

சேலம் மாவட்ட ஊராட்சிக் குழு தலைவராக பாமகவைச் சேர்ந்த ரேவதி என்பவர் வெற்றி பெற்றார்.

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர்கள், ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர்கள் மற்றும் கிராம ஊராட்சி மன்ற துணைத் தலைவர்கள் ஆகிய 10 ஆயிரத்து 300 உள்ளாட்சிப் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான மறைமுகத் தேர்தல் இன்று (ஜன.11) நடைபெற்று வருகிறது. உயர் நீதிமன்றத்தில் அளித்த வாக்குறுதியின்படி, மறைமுகத் தேர்தல் முழுவதும் ஆடியோ இல்லாத வீடியோவாகப் பதிவு செய்யவும் மாநிலத் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்நிலையில், சேலம் மாவட்ட ஊராட்சிக் குழு தலைவருக்கான தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் அதிமுக, பாமக மற்றும் தேமுதிக உறுப்பினர்கள் 21 பேரும் திமுக உறுப்பினர்கள் 5 பேரும் பங்கேற்றனர். இத்தேர்தலில் பதிவான மொத்த வாக்குகள் 26. இதில், பாமக வேட்பாளர் ரேவதி 22 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் நல்லம்மாள் 4 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்

திமுக உறுப்பினர்கள் ஐந்து பேரில் நான்கு பேர் மட்டுமே திமுகவுக்கு வாக்களித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in