Last Updated : 10 Jan, 2020 04:06 PM

 

Published : 10 Jan 2020 04:06 PM
Last Updated : 10 Jan 2020 04:06 PM

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து மதுரை - மேலூர் சாலையில் மறியல்: போக்குவரத்து பாதிப்பு

குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி மதுரை-மேலூர் சாலையில், ஒத்தக்கடையில் இஸ்லாமிய கூட்டமைப்பு அனைத்து இயக்கங்கள் சார்பில் சாலை மறியல் நடைபெற்றது.

மத்திய அரசு குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து சட்டமாக்கியுள்ளது. இந்த சட்டத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜெயின் மதத்தினர், பவுத்த மதத்தினர் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க, குடியுரிமை திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால், முஸ்லிம்களுக்கு இந்த சட்டத்தில் இடம் அளிக்கப்படவில்லை.

அதனால், நாடு முழுவதும் இச்சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி மதுரை-மேலூர் சாலையில், ஒத்தக்கடையில் இஸ்லாமிய கூட்டமைப்பு அனைத்து இயக்கங்கள் சார்பில் சாலை மறியல் நடைபெற்றது.

இதில் 100-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் மற்றும் இஸ்லாமிய கூட்டமைப்பு அனைத்து இயக்கங்கள் சார்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இதனால் மதுரை -மேலூர் சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.

முன்னதாக நேற்று, குடியுரிமை சட்டத்தை ஆதரித்து பாஜக சார்பில் மதுரை செல்லூரில் பொதுக்கூட்டம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x