Published : 10 Jan 2020 10:39 AM
Last Updated : 10 Jan 2020 10:39 AM

விஷ்ணுபிரியா தற்கொலையில் யாருடைய தூண்டுதலும் இல்லை: சிபிஐ அறிக்கையை ஏற்றது கோவை நீதிமன்றம்

திருச்செங்கோட்டில் டிஎஸ்பியாக பணியாற்றி வந்த விஷ்ணுபிரியா, கடந்த 2015 செப்.18-ம் தேதி முகாம் அலுவலகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உயர் அதிகாரிகளின் அழுத்தம் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக புகார் எழுந்தது. இந்நிலையில், குற்றவாளிகள் யாரும் இல்லை எனவும், வழக்கை கைவிடுவதாகவும் கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் சிபிஐ 2018 ஏப்ரல் 16-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்தது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்த விஷ்ணுபிரியாவின் தந்தை ரவி, வழக்கை மீண்டும் விசாரிக்கக் கோரி மனு தாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்த கோவைதலைமை குற்றவியல் நீதிமன்றம், சிபிஐ அறிக்கையில் உள்ள சிலவற்றை சுட்டிக்காட்டி, சிபிஐ
தனது விசாரணையை தொடரவும், அறிக்கையில் எழுந்துள்ள சந்தேகங்களுக்கு பதில் அளிக்கவும், 6 மாதங்களில் விசாரணை முடித்து அறிக்கை தாக்கல் செய்யவும் கடந்த 2018 டிசம்பரில் உத்தரவிட்டது.

விசாரணையை முடித்து 2-வது அறிக்கையை சிபிஐ கடந்தாண்டு ஆகஸ்ட் 28-ம் தேதி தாக்கல் செய்தது. அதில், டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலையில் யாருடைய தூண்டுதலும் இல்லை எனவும்,அறிக்கையை ஏற்றுக்கொள்ளும்படியும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கு விஷ்ணுபிரியாவின் தந்தை ரவி எதிர்ப்பு தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களை கேட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றம், விஷ்ணுபிரியாவின் தந்தை அளித்த மனுவை தனி புகாராக எடுத்துக்கொண்டு, நீதிமன்றமே விசாரணை நடத்தும் என்று தெரிவித்தது.

இதையடுத்து, கடந்த நவம்பர் மாதம் நீதிமன்ற விசாரணை தொடங்கியது. பின்னர், விஷ்ணுபிரியாவின் தந்தை ரவி, தாய் கலைச்செல்வி, நாமக்கல் மாவட்டத்தில், டிஎஸ்பியாக பணியாற்றி,தற்போது சென்னை கூடுதல் எஸ்பியாக பணிபுரியும் சேவியர் பிரான்சிஸ் பெஸ்கி, சென்னையில் உதவி ஆணையராக உள்ளவிஷ்ணுபிரியாவின் தோழி மகேஷ்வரி, அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டான் காவல் ஆய்வாளர் சந்திரலேகா, திருவாரூர் டிஎஸ்பி இனிகோ திவ்யன், ஓய்வுபெற்ற டி.எஸ்.பி. முத்தமிழ் முதல்வன் ஆகிய7 சாட்சியங்களிடம் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் இல்லாமல்நேரடியாக நீதிபதி வாக்குமூலம் பதிவு செய்தார்.

இந்நிலையில், நிறுத்தி வைக்கப்பட்ட சிபிஐயின் 2-வது குற்றப்பத்திரிகை மீதான உத்தரவை நீதிபதி ஏ.எஸ்.ரவி நேற்று பிறப்
பித்தார். அப்போது, யாருடைய தூண்டுதலும் இல்லை எனசிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்த நீதிபதி, விஷ்ணுபிரியா தந்தை ரவி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட 2-வது மனுவை தள்ளுபடி செய்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x