மதுக்கடை எதிர்ப்பு போராட்டத்தில் போலீஸ் அடக்குமுறை: ஜனநாயக வாலிபர் சங்கம் கண்டனம்

மதுக்கடை எதிர்ப்பு போராட்டத்தில் போலீஸ் அடக்குமுறை: ஜனநாயக வாலிபர் சங்கம் கண்டனம்
Updated on
1 min read

மதுக்கடை எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபடுவோர் மீது போலீஸார் அடக்குமுறை செய்வதாக ஜனநாயக வாலிபர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலத் தலைவர் செ.முத்துக்கண்ணன், மாநிலச் செயலாளர் ரா.வேல் முருகன் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மது வேண்டாம் என்று போராடும் வாலிபர் சங்கத்தினரை போலீஸார் தாக்கி வருகின்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் வாலிபர் சங்கத்தை சேர்ந்த 66 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த 6 ஊழியர்கள் மீதும் ஈரோட்டில் ஒருவர் மீதும் கடும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வன்முறையில் ஈடுபட்ட காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண் டும். ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது போல், ஆகஸ்ட் 10-ம் தேதி 200 மையங்களில் 24 மணி நேர உண்ணாவிரத போராட்டம் நடைபெறும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in