Published : 06 Jan 2020 01:19 PM
Last Updated : 06 Jan 2020 01:19 PM

சட்டப்பேரவை கூட்டத்தொடர் 9-ம் தேதி வரை நடக்கிறது: அலுவல ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு 

தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கியது. தொடர்ந்து 9-ம் தேதி வரை நடக்கும் என அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. காலை 9 மணிக்கு ஆளுநர் பன்வாரிலால் உரையுடன் கூட்டம் தொடங்கி பின் முடிந்தது. சட்டப்பேரவையை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து சபாநாயகர் தனபால் தலைமையில் சட்டப்பேரவைக் கூட்டம் முடிந்த பின் நடந்தது.

இந்தக் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ், திமுக சட்டப்பேரவை துணைத் தலைவர் துரைமுருகன், கொறடா சக்ரபாணி, காங்கிரஸ் சட்டப்பேரவைத் தலைவர் கே.ஆர்.ராமசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் சட்டப்பேரவையை வரும் 9-ம் தேதி வரை நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது. நாளையும், நாளை மறுநாளும் ( ஜன.7 மற்றும் 8 ) ஆளுநர் உரையின் மீது உறுப்பினர்கள் விவாதம் நடக்கும். நாளை பிற்பகலிலும் சட்டப்பேரவை நடக்கும். இரண்டு நாள் விவாதத்தில் யாருக்கு எவ்வளவு நேரம் ஒதுக்குவது என்பது குறித்தும் முடிவெடுக்கப்பட்டது.

7 மற்றும் 8-ம் தேதி நடக்கும் விவாதத்துக்குப் பின் 9-ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதிலளிப்பார். இவ்வாறு அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x