முன்னாள் அமைச்சர் மனைவி ஊராட்சி தலைவராக தேர்வு: மகன் ஒன்றியக் கவுன்சிலர் ஆனார்

ஊராட்சி தலைவராக வெற்றிபெற்றதற்கான சான்றிதழுடன் முன்னாள் அமைச்சரின் மனைவி ஆர்.விசாலாட்சி.
ஊராட்சி தலைவராக வெற்றிபெற்றதற்கான சான்றிதழுடன் முன்னாள் அமைச்சரின் மனைவி ஆர்.விசாலாட்சி.
Updated on
1 min read

திருப்பூர் மாவட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சரின் மனைவியும், மகனும் நேற்று நடந்த தேர்தலில் வெற்றிபெற்றனர்.

வெள்ளக்கோவில் ஊராட்சி ஒன்றியம் மேட்டுப்பாளையம் ஊராட்சித் தலைவராக போட்டியிட்ட 82 வயது ஆர். விசாலாட்சிவெற்றிபெற்றார். இவர் முன்னாள் அமைச்சரான துரை ராமசாமியின் மனைவி ஆவார். மேட்டுப்பாளையம் ஊராட்சித் தலைவர் பதவிக்கு 2 பேர் போட்டியிட்டனர். ஆர்.விசாலாட்சியை எதிர்த்து போட்டியிட்ட சாந்தி 2728 வாக்குகள் பெற்றார். ஆர். விசாலாட்சி 3069வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார்.

ஊராட்சி ஒன்றியக் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட இவரது மகன் ஆர்.வி.சுதர்சன் வெற்றிபெற்றார். ஒரே உள்ளாட்சித் தேர்தலில் தாயும், மகனும் வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in