Last Updated : 30 Aug, 2015 11:24 AM

 

Published : 30 Aug 2015 11:24 AM
Last Updated : 30 Aug 2015 11:24 AM

தசரா, தீபாவளி, கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக தலா 9 நாட்கள் உயர் நீதிமன்றத்துக்கு விடுமுறை

தசரா, தீபாவளி மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகைகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை உயர் நீதிமன்ற கிளைக்கு தலா 9 நாட்கள் வீதம் 27 நாட்கள் விடுமுறை விடப்படுகின்றன.

உயர் நீதிமன்றத்துக்கு அக் டோபர் 17-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை 9 நாட்கள் தசரா விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 23-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை 9 நாட்கள் கிறிஸ்துமஸ் விடுமுறை அளிக்கப்பட்டிருக் கிறது.

இந்த ஆண்டு நவம்பர் 10-ம் தேதி தீபாவளி கொண்டாடப் படுகிறது. இதையொட்டி தீபாவளிக்கு முந்தைய நாளான நவம்பர் 9-ம் தேதியும், தீபாவளிக்குப் பிறகு நவம்பர் 11, 12, 13 ஆகிய மூன்று நாட் களும் உயர் நீதிமன்றத்துக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சனி, ஞாயிற்றுக்கிழமையை சேர்த்தால், நவம்பர் 7-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை தீபாவளிக்கும் 9 நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது.

இந்தாண்டு தசரா, தீபாவளி, கிறிஸ்துமஸ் பண்டிகைகளுக்கு தலா 9 நாட்கள் வீதம் மொத்தம் 27 நாட்கள் சென்னை உயர் நீதிமன்றம், மதுரை உயர் நீதிமன்ற கிளைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருப்பது உயர் நீதிமன்றப் பணியாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x