Last Updated : 31 Dec, 2019 12:53 PM

 

Published : 31 Dec 2019 12:53 PM
Last Updated : 31 Dec 2019 12:53 PM

குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கண்டித்து மதுரையில் தமுமுக சார்பில் ஆர்ப்பாட்டம்: ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்

தேசிய குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கண்டித்து மதுரையில் இன்று (செவ்வாய்க்கிழமை) தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்திய அரசு குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து சட்டமாக்கியுள்ளது. இந்த சட்டத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜெயின் மதத்தினர், பவுத்த மதத்தினர் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க, குடியுரிமை திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால், முஸ்லிம்களுக்கு இந்த சட்டத்தில் இடம் அளிக்கப்படவில்லை.

அதனால், நாடு முழுவதும் இச்சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், மதுரையில் இன்று (செவ்வாய்க்கிழமை) தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மதுரை ஓபுலா படித்துறையை ஒட்டி கண்டனப் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு வக்ஃப்பு வாரிய முன்னாள் தலைவர் ஹைதர் அலி தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில், தேசிய குடியுரிமை சட்டம் தேச ஒற்றுமையை சீர்குலைக்கும் சட்டமாக உள்ளது என்று ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர். இந்தியா எங்களின் தேசம் என அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x