Published : 31 Dec 2019 10:39 AM
Last Updated : 31 Dec 2019 10:39 AM

தமிழகத்தில் கலவர சூழ்நிலையை உருவாக்கும் எதிர்க்கட்சிகள்: பாஜக தேசிய செயலர் ஹெச்.ராஜா குற்றச்சாட்டு

காரைக்குடி

காரைக்குடியில் பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது: பிரதமரையும் உள்துறை அமைச்சரையும் கொலை செய்ய வேண்டும் என்று பேசுகிற அளவுக்கு காங்கிரஸைச் சேர்ந்த நெல்லை கண்ணனுக்கு எப்படி துணிச்சல் வந்தது. அவர் மீது காங்கிரஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது நெல்லை கண்ணனின் கருத்தா, அல்லது காங்கிரஸ் கட்சிக்கு எதுவும் திட்ட இருக்கிறதா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு ஏன் இதுவரை கைது செய்யவில்லை. நெல்லை கண்ணனை உடனடியாக கைது செய்ய வேண்டும். இதுகுறித்து பாஜகவினர் தமிழகம் முழுவதும் அனைத்து காவல்நிலையங்களிலும் புகார் அளிக்க உள்ளனர்.

சுதந்திரத்துக்கு முன்பாக முஸ்லிம் லீக்கை வைத்து நாடு முழுவதும் கலவர சூழ்நிலை உருவாக்கப்பட்டது. தற்போது தமிழகத்தில் அதுபோன்ற கலவர சூழ்நிலையை உருவாக்க காங்கிரஸ், திமுக முயற்சிக்கின்றன. 10 ஆண்டுகளுக்கு முன்பு குடியுரிமைச் சட்டத்தை ஆதரித்து பேசிய ப.சிதம்பரம், இன்றைக்கு அதை எதிர்க்கிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x