Published : 31 Dec 2019 08:43 AM
Last Updated : 31 Dec 2019 08:43 AM

வாக்கு சேகரிப்பில் பள்ளிச் சிறுவர்கள்

உடுமலை: திருப்பூர் மாவட்டம், உடுமலை, கணக்கம்பாளையம் ஊராட்சியில் நேற்று நடைபெற்ற தேர்தலின்போது வாக்குச் சாவடிக்கு செல்லும் வழியில், வேட்பாளர்கள் சிலர் பள்ளி மாணவர்கள் கையில் பதாகைகளைக் கொடுத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபடுத்தினர்.

இதைப் பார்த்த மற்றொரு பெண் வேட்பாளர் தனது சின்னம் பொறித்த பதாகை ஒன்றை கொடுத்து தனக்கு ஆதரவாகவும் வாக்கு சேகரிக்குமாறு கேட்டுச் சென்றார். இது சட்டப்படி குற்றம் என்பதை அறியாமல் வேட்பாளர்கள் இவ்வாறு நடந்து கொள்வதாக பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்தனர். இதுகுறித்து ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் கூறும்போது, 'இதுகுறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x