Last Updated : 30 Dec, 2019 12:15 PM

 

Published : 30 Dec 2019 12:15 PM
Last Updated : 30 Dec 2019 12:15 PM

காரைக்குடி அருகே ஆர்வத்துடன் வாக்களித்த திருநங்கைகள்: சிவகங்கையில் 11 மணி நிலவரப்படி 18.8% வாக்குப்பதிவு

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே சங்கராபுரம் வாக்குச்சாவடியில் திருநங்கைகள் ஆர்வத்துடன் வரிசையில் காத்திருந்து தங்களது ஜனநாயகக் கடமையாற்றினர்.

சிவகங்கை மாவட்டத்தில் கல்லல், தேவகோட்டை, சாக்கோட்டை, கண்ணங்குடி, திருப்பத்தூர், சிங்கம்புணரி, எஸ்.புதூர் ஆகிய 7 ஒன்றியங்களில் இன்று இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெறுகிறது.

இதில் 1,850 பதவிகளுக்கு வாக்குப்பதிவு நடக்கிறது. 856 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 4,218 வாக்குச்சாவடி அலுவலர்கள் நியமிக்கப்பட் டுள்ளனர். 2,500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

காலை முதலே மாவட்டத்தில் அமைதியாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 18.80% வாக்குகள் பதிவாகியுள்ளது.

அதிமுக - திமுக நேரடி போட்டி:
சிவகங்கையில் இந்த இரண்டாம் கட்டத் தேர்தலில் மாவட்டக் கவுன்சிலர் பதவிகளுக்கு 5 இடங்களிலும், ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு 51 இடங்களிலும் என, மொத்தம் 56 இடங்களில் அதிமுக, திமுக நேரடியாக மோதுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x