Published : 29 Dec 2019 02:34 PM
Last Updated : 29 Dec 2019 02:34 PM

எதிர்க்கட்சியாக இருப்பதால் மக்களுக்கு உதவ முடியவில்லை: கே.என்.நேரு பேச்சு

திமுக எதிர்க்கட்சியாக இருப்பதால் மக்களுக்கு எந்த ஒரு நலத்திட்ட உதவிகளையு பெற்றுத் தர முடியவில்லை என்று திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

திருச்சி மாவட்டம் லால்குடி ஒன்றியம் பகுதியில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்ட அவர் நாடாளுமன்ற தேர்தலின் போது திமுகவுக்கு மக்கள் ஆதரவு அளித்தது போல் உள்ளாட்சி தேர்தலிலும் மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்றார்.

அவர் பேசியதாவது, “1981 முதல் இன்றைய தேதி வரை திமுக எப்போதெல்லாம் ஆட்சியில் இருந்ததோ அப்போதெல்லாம் எல்லா திட்டங்களும் லால்குடிக்கு வந்திருக்கிறது.

நாங்கள் எதிர்க்கட்சியில் இருப்பதால் முதியோர் உதவித்தொகை கூட கேட்க முடியவில்லை. ரோடு போடுங்கள் என்றால் இல்லையில்லை ரோடெல்லாம் போட முடியாது ஸ்மார்ட் சிட்டி வந்திருச்சு, பார்க்தான் கட்ட முடியும் என்கிறார்கள்.

சமுதாயக் கூடம் கட்டி கொடுங்கள் என்றால் அதெல்லாம் கட்டிக் கொடுக்க முடியாது என்கின்றனர். நாங்க சமுதாயக் கூடம் கட்டினாலும் அதை திறக்க மாட்டேங்கறாங்க. 4 தடவை சொன்னாலும் திறக்க மாட்டேங்கிறாங்க. இதுதான் இன்றைய உள்ளாட்சியின் நிலை” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x