Published : 28 Aug 2015 09:37 AM
Last Updated : 28 Aug 2015 09:37 AM

மாற்றான் தோட்டத்து மல்லிகை எங்களுக்கும் மணம் உண்டு: திமுக எம்எல்ஏ உருக்கம்

மாற்றான் தோட்டத்து மல்லிகையான எங்களுக்கும் மணம் உண்டு என்பதை ஆளுங்கட்சியினர் புரிந்துகொள்ள வேண்டும் என திமுக உறுப்பினர் கம்பம் என்.ராமகிருஷ்ணன் உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார்.

சட்டப்பேரவையில் நேற்று பொதுப்பணித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தை தொடங்கி வைத்து பேசிய அவர், ‘‘மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்றார்

அண்ணா. எதிர்க்கட்சி வரிசையில் உள்ள நாங்களும் மாற்றான் தோட்டத்து மல்லிகைதான். எங்களுக்கும் மணம் உண்டு. நாங்கள் கள்ளிச் செடிகள் அல்ல. எனவே, எங்கள் கருத்துகளையும் கேட்டு அரசு செயல்பட வேண்டும். நாங்கள் எதிரிக் கட்சி அல்ல. எதிர்க்கட்சி என்பதை அரசு உணர வேண்டும்’’ என்றார்.

அப்போது குறுக்கிட்ட அமைச்சர் வைத்திலிங்கம், ‘‘எதிர்க் கட்சி, எதிரிக் கட்சி பற்றியெல்லாம் திமுக உறுப்பினர் பேசுகிறார். 1972-லிருந்து வரலாற்றை சொல்ல முடியும். அப்படி சொன்னால் விவாதம் வேறு மாதிரியாக சென்றுவிடும். எனவே, கம்பம் ராமகிருஷ்ணன் பொதுப்பணித்துறை மானியக் கோரிக்கை பற்றி பேசுமாறு’’ வேண்டுகோள் விடுத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x