அரசு பல் மருத்துவமனையில் நாள்தோறும் 2 ஆயிரம் பேருக்கு சிகிச்சை

அரசு பல் மருத்துவமனையில் நாள்தோறும் 2 ஆயிரம் பேருக்கு சிகிச்சை
Updated on
1 min read

தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நாள்தோறும் 2 ஆயிரம் பேருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இது தொடர்பாக மருத்துவமனை டீன் டாக்டர் பா.சரவணன் நேற்று செய்தியாளர்களிடம் கூறிய தாவது:

பல் மருத்துவர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று ஒரு புதிய அரசு பல் மருத்துவக் கல்லூரி தொடங்கப்படும் என்று அறிவித்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த மருத்துவமனையில் தினமும் ஆயிரம் முதல் 2 ஆயிரம் நோயாளிகள் சிகிச்சைக்கு வந்து செல்கிறார்கள். இவர்களில் கணிசமானவர்கள் மதுரை, கன்னியாகுமரி, திருநெல்வேலி போன்ற மாவட்டங்களில் இருந்து வருகிறார்கள். இனிமேல் இவர்கள் தென்தமிழகத்தில் அமையவுள்ள புதிய அரசு பல் மருத்துவக் கல்லூரியிலேயே அதிநவீன சிகிச்சையை பெற்றுக்கொள்ள முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in