Published : 27 Dec 2019 09:02 PM
Last Updated : 27 Dec 2019 09:02 PM

உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மோகன் காலமானார்

முன்னாள் உச்சநீதிமன்ற நீதிமன்ற நீதிபதி மோகன் வயோதிகம், உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார்.

உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சண்முகசுந்தரம் மோகன் (89). ஓய்வுக்குப்பின் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் வசித்து வந்தார். 1930-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பிறந்த மோகன், மாநிலக் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார்.

சென்னை பல்கலைகழகத்தில் சட்டம் முடித்தார். சட்டமேற்படிப்பில் சர்வதேச சட்டம் குறித்து படித்தார். 1954 சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஆனார். 1969-ம் ஆண்டு அரசு ப்ளீடராக நியமிக்கப்பட்டார். 1971-ம் ஆண்டு அரசு தலைமை வழக்கறிஞர் ஆனார். 1974-ம் ஆண்டு பிப்ரவரியில் சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

1975-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் சென்னை உயர் நீதிமன்ற நிரந்தர நீதிபதியானார். 1988-ம் ஆண்டு டிசம்பரில் பொறுப்பு தலைமை நீதிபதியானார். 1989-ம் ஆண்டு அக்டோபரில் கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஆனார். 1990 பிப்ரவரி முதல் மே வரை கர்நாடக பொறுப்பு ஆளுனராக செயல்பட்டுள்ளார்.

1991-ம் ஆண்டு அக்டோபரில் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 1995-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஓய்வுப்பெற்றார்.

இந்நிலையில், சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் குடும்பத்தாருடன் வசித்துவந்த முன்னாள் நீதிபதி எஸ்.மோகன், வயது முதுமை மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று மாலை 6.10 மணியளவில் காலமானார்.

அவரது உடல் ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x