Published : 27 Dec 2019 03:49 PM
Last Updated : 27 Dec 2019 03:49 PM

கோவை சிறுமியை வன்கொடுமை செய்து கொலை செய்த குற்றவாளிக்கு தூக்கு தண்டனை

கோவை, துடியலூர், பன்னிமடையில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி சந்தோஷ்குமாருக்கு ஆயுள் தண்டனையும், தூக்குத்தண்டனையும் வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கோவை பன்னிமடை அருகே உள்ள திப்பனூர் பகுதியை சேர்ந்த அரசு பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்த 7 வயது சிறுமி கடந்த மார்ச் 25-ம் தேதி மாயமானர். பின்னர் அடுத்த நாளே வீட்டின் பின்புறத்தில் துணியால் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக சிறுமி கண்டெடுக்கப்பட்டார்.

பிரேத பரிசோதனையில் சிறுமி பாலியல் வன்கொடுமைkகு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது உறுதியானது. சிறுமியின் கொலை தொடர்பாக 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசராணை நடைபெற்று வந்தது. இந்த சம்பவம் பெரும் அதிர்வை ஏற்படுத்திய நிலையில், சிறுமி கொலை நடந்த 6 நாட்களுக்கு பிறகு தொண்டாமுத்தூரைச் சேர்ந்த சந்தோஷ் குமார் என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

வழக்கு கோவையில் உள்ள மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் அனைத்து தரப்பு வாதங்கள் நிறைவடைந்தால் தீர்ப்பு இன்று வெளியானது. மகளிர் நீதிமன்ற நீதிபதி ராதிகா தீர்ப்பளித்தார்.

அவரது தீர்ப்பில் குற்றவாளி சந்தோஷ்குமாருக்கு போக்சோ சட்டத்தின்படி ஆயுள் தண்டனையும், கொலைக்குற்றத்துக்காக தூக்கு தண்டனையும் அளிப்பதாக தீர்ப்பளித்தார்.

தீர்ப்பு வெளியானதை அடுத்து நீதிமன்றத்தில் கூடியிருந்த சிறுமியின் தாயார், மாதர் சங்கத்தினர் சந்தோஷத்தை தெரிவித்தனர். நீதிபதி ராதிகாவுக்கு சிறுமியின் தாயார் நன்றி தெரிவித்தார். இதுவே கடைசியாக இருக்கவேண்டும், இனி இதுபோன்று யார் பாதிக்கப்பட்டாலும் அவர்களுக்கு ஆதரவாக நான் துணை நிற்பேன் என சிறுமியின் தாயார் தெரிவித்தார்.

குற்றத்தில் சம்பந்தப்பட்ட மற்றொரு குற்றவாளியையும் கண்டுபிடித்து கைது செய்யவேண்டும் என மாதர் சங்கத்தினர் நீதிமன்ற வாயிலில் கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்தவழக்கில் கோவை மகளிர் நீதிமன்றத்தில் அக்.16 அன்று நீதிமன்றத்தில் நவ.1 தடய அறிவியல் ஆய்வு அறிக்கை. இந்த வழக்கில் மற்றொரு நபருக்கும் தொடர்பு இருப்பதாக டி.என்.ஏ ஆய்வில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதையெடுத்து சிறுமியின் தாய் தனது மகள் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கை மீண்டும் விசாரிக்க கோரி கோவை மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு புதிய வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். அதன் நிலை என்ன என்பது பின்னர் தெரியவரும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x