Last Updated : 27 Dec, 2019 03:09 PM

 

Published : 27 Dec 2019 03:09 PM
Last Updated : 27 Dec 2019 03:09 PM

கிராமங்களில் அதிமுகவுக்கு அதிக செல்வாக்கு; நாங்கள் அமோக வெற்றி பெறுவோம்: அமைச்சர் பாஸ்கரன் பேட்டி

தமிழகம் முழுவதும் நடைபெற்றுவரும் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும் என சிவகங்கையில் வாக்களித்துவிட்டு அமைச்சர் பாஸ்கரன் தெரிவித்தார்.

தமிழகத்தில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கு 2 கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. முதல் கட்ட தேர்தல் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 7 மணிக்கு தொடங்கியது. இத்தேர்தல் மாலை 5 மணி வரை நடக்கிறது.

சிவகங்கை மாவட்டம் ஊராட்சி ஒன்றியங்களில் முதற்கட்டமாக 5 ஊராட்சி ஒன்றியங்களில் இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.
இதில் கதர் மற்றும் கிராமத் தொழில்கள் துறை அமைச்சர் பாஸ்கரன் தனது சொந்த ஊரான தமராக்கி தெற்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "உள்ளாட்சித் தேர்தலில் தமிழகம் முழுவதும் அதிக இடங்களில் நாங்கள் வெற்றிபெறுவோம்.
உள்ளாட்சித் தேர்தலையொட்டி நான் மாவட்டம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்தபோது அதிமுகவுக்கு மக்கள் மத்தியில் நிலவிய எழுச்சிமிகு வரவேற்பைப் பார்த்து நான் வியந்தேன்.

சிவகங்கையில் மட்டுமல்லாமல் தமிழகத்தின் அனைத்து கிராமங்களிலுமே மக்களிடையே அதிமுகவுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.
இதனால் நிச்சயமாக அதிக இடங்களைக் கைப்பற்றி நாங்கள் அமோக வெற்றி பெறுவோம்" என்று கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x