Published : 27 Dec 2019 02:28 PM
Last Updated : 27 Dec 2019 02:28 PM

உள்ளாட்சித் தேர்தல்: வரிசையில் மக்களுடன் காத்திருந்து வாக்களித்த முதல்வர் பழனிசாமி

வாக்களிக்க வரிசையில் காத்திருக்கும் முதல்வர் பழனிசாமி, படம்: எஸ்.குருபிரசாத்

சேலம்

உள்ளாட்சித் தேர்தலில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி வரிசையில் காத்திருந்து வாக்களித்தார்.

தமிழகத்தில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கு 2 கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. முதல் கட்ட தேர்தல் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 7 மணிக்கு தொடங்கியது. இத்தேர்தல் மாலை 5 மணி வரை நடக்கிறது.

முதல் கட்டத்தில் 156 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 260 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும், 2 ஆயிரத்து 546 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும், 4,700 கிராம ஊராட்சி தலைவர் பதவியிடங்களுக்கும், 37,830 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கு போட்டியிடுபவர்களை தேர்வு செய்வதற்கான வாக்குப்பதிவு நடக்கிறது.

24 ,680 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. முதல் கட்ட தேர்தலில் ஒரு கோடியே 30 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். ஊராட்சி தேர்தலுக்காக 702 தேர்தல் நடத்தும் அலுவலர்களும், 13 ஆயிரத்து 62 உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர்களும் தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ளனர். ஒரு வாக்குச்சாவடிக்கு 7 அல்லது 8 அலுவலர்கள் பணியில் இருப்பார்கள். பாதுகாப்பு பணிக்காக 63 ஆயிரம் போலீஸார் பணி அமர்த்தப்பட்டு இருக்கிறார்கள்.

வாக்களிக்கும் முதல்வர் பழனிசாமி, படம்: எஸ்.குருபிரசாத்

இந்நிலையில், சேலம் மாவட்டம் நெடுங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சிலுவம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் முதல்வர் பழனிசாமி குடும்பத்துடன் வந்து, வரிசையில் காத்திருந்து வாக்குப்பதிவு செய்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x