Published : 27 Dec 2019 09:22 AM
Last Updated : 27 Dec 2019 09:22 AM
பிரதமர் மோடிக்கு பா.ஜ.க தீவிரத் தொண்டர் ஒருவர் திருச்சி அருகே கோயில் கட்டியுள்ளார்.
திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த எரக்குடி கிராமத்தைச் சேர்ந்த 50 வயது விவசாயி சங்கர் ஒரு தீவிர பா.ஜ. தொண்டர். இவர் தன் சொந்த செலவில் பிரதமர் நரேந்திர மோடிக்குக் கோயில் ஒன்றை கட்டி மோடியின் சிலையை அதில் வைத்துள்ளார்.
இந்தக் கோயிலுக்குள் அவர் மோடி தவிர காந்திஜி, காமராஜர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரது படங்களையும் வைத்துள்ளார்.
மோடியின் மீதுள்ள அதீதப் பற்று காரணமாக கோயில் கட்டியுள்ளதாகவும் பாஜக தலைவர்களை அழைத்து கும்பாபிஷேகம் செய்யவிருப்பதாகவும் அவர் தன் ஆசையை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT