Published : 26 Aug 2015 10:32 AM
Last Updated : 26 Aug 2015 10:32 AM

வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையர்கள் 9 பேர் கைது

சென்னை மணலி நெடுஞ்செழியன் தெருவைச் சேர்ந்தவர் இசக்கிமுத்து (48). இவர் கடந்த 20-ம் தேதி வீட்டின் அருகே நடந்து சென்றுகொண்டிருந்தார்.

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் கத்தியை காட்டி மிரட்டி ரூ.3,500 பணம், செல்போன், கைக்கடிகாரம் ஆகியவற்றை பறித்துச் சென்றனர். இது குறித்து மணலி போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.

நேற்று முன்தினம் இரவில் மணலி அருகே பல்ஜிபாளையம் சாலையில் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரிடம் நடத்திய விசாரணையில், மாதவரம் பால் பண்ணையை சேர்ந்த அஜித்குமார் (20), சசிகுமார்(22) என்பதும், இவர்கள்தான் இசக்கிமுத்துவிடம் வழிப்பறி செய்ததும் தெரியவந்தது. இவர்கள் கொடுத்த தகவலின்படி வழிப்பறி கொள்ளை கும்பலை சேர்ந்த தமிழ்செல்வன்(21), சுரேஷ்(45), நவீன்(19) ஆகியோரையும் போலீஸார் கைது செய்தனர்.

மேலும், வழிப்பறியில் ஈடுபட்ட காளி(21), தினேஷ்(23), சசி(22), அருண்(24) ஆகியோரையும் போலீஸார் கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x