Published : 22 Dec 2019 07:28 AM
Last Updated : 22 Dec 2019 07:28 AM

டிசம்பர் 22 - புயலால் சிதைந்த 55-ம் ஆண்டு நினைவு தினம்: பீனிக்ஸ் பறவைபோல புத்துயிர் பெறும் தனுஷ்கோடி

எஸ். முஹம்மது ராஃபி

சங்ககாலம் தொட்டு தனுஷ்கோடி, தமிழகத்தின் பிரதான துறை முகமாக விளங்கியது. சங்கப்புலவர் கடுவன் மள்ளனார் இயற்றிய அகநானூறு தொகுப்பில் 70-வது பாடலில், பாண்டியன் ஆட்சிக்கு உட்பட்டிருந்த தொன் முதுகோடி என்று தனுஷ்கோடியைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.

மார்க்கோ போலோ, இப்னு பதூதா போன்ற புகழ்பெற்ற வர லாற்றுப் பயணிகள் பல நூறாண்டு களுக்கு முன்பே, தாங்கள் எழுதி வைத்த பயணக் குறிப்புகளில் தனுஷ்கோடி கடற்பகுதியில் நடந்த முத்துக் குளித்தலை சிலாகித்து பதிவு செய்துள்ளனர். தனுஷ்கோடி யில் இருந்து தலைமன்னார், யாழ்ப் பாணம், கொழும்புக்கு தினசரி தோணி (படகுகள்) போக்குவரத்து 15-ம் நூற்றாண்டின் தொடக்கம் முதல் நடைபெற்று வந்தன.

சென்னையில் இருந்து தனுஷ் கோடிக்கு ரயில் போக்குவரத்து, தனுஷ்கோடியில் இருந்து தலை மன்னாருக்கு கப்பல் போக்குவரத்து திட்டத்தை ஆங்கிலேயர் உரு வாக்கினர். இதன் மூலம் மன் னார் மற்றும் பாக். ஜலசந்தி கடற் பகுதியில் பாம்பன் ரயில் பாலம் கட்டப்பட்டு 1914 பிப்.24-ம் தேதி போட் மெயில் ரயில் தனது முதல் பயணத்தை தொடங்கியது.

தனுஷ்கோடிக்கும் தலைமன் னாருக்கும் கப்பல் போக்குவரத்து தொடங்கிய பொன்விழா ஆண் டான 1964 டிச.17-ம் தேதி புயல் சின்னம் உருவாகி, டிச.22-ம் தேதி இலங்கையைக் கடந்து 280 கி.மீ. வேகத்தில் இரவு 11 மணிக்கு மேல் தனுஷ்கோடிக்குள் புகுந்தது.

புயலுக்கு முன்னர், ராமேசுவரத் தில் இருந்து தனுஷ்கோடிக்கு புறப்பட்டுச் சென்ற போட் மெயில் ரயிலில், புயல் மிச்சம் வைத்தது வெறும் இன்ஜினின் இரும்புச் சக் கரங்களை மட்டுமே. மற்ற அனைத் தையும் புயல் கடலுக்குள் இழுத் துச் சென்றது. இந்த ரயிலில் பய ணம் செய்த அனைவரும் உயிரிழந் தனர். தனுஷ்கோடியில் வசித்த ஆயிரக்கணக்கான மக்களும் இறந்தனர்.

தனுஷ்கோடி துறைமுகம், பட குத் துறை, ரயில் நிலையம், அஞ் சல் நிலையம், சுங்கத் துறை அலு வலகம், மருத்துவமனை, மாரி யம்மன் கோயில், தேவாலயம், இஸ்லாமியர் அடக்கஸ்தலம், பள்ளிக்கூடம் உள்ளிட்ட பெரிய கட்டிடங்கள் அனைத்தும் புயலின் கோரத் தாண்டவத்தில் அழிந்தன.

புயல் தாக்கி 50 ஆண்டுகளை கடந்த நிலையிலும் கூட தனுஷ் கோடியில் மருத்துவம், மின்சாரம், போக்குவரத்து, சாலை, குடிநீர் வசதி என்று எந்த அடிப்படை வசதி யும் இல்லாமல், கடலை மட்டுமே நம்பி தனுஷ்கோடியைச் சுற்றி 500-க்கும் மேற்பட்ட கரைவலை இழுக்கும் மீனவக் குடும்பங்கள் வாழ்ந்து வந்தனர்.

அரசுப் பேருந்துகள் இயக்கம்

இந்நிலையில், கடந்த 27.07.2017 அன்று ராமேசுவரம் முகுந்தராயர் சத்திரம் முதல் தனுஷ்கோடி அரிச் சல்முனை வரையிலும் ரூ.65 கோடியே 68 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட புதிய தேசிய நெடுஞ்சாலை திறக்கப்பட்டது. தொடர்ந்து 53 ஆண்டுகள் கழித்து, முதன்முறையாக தனுஷ்கோடி மற்றும் அரிச்சல்முனை பகுதி களுக்கு அரசு பஸ் இயக்கப் பட்டதைத் தொடர்ந்து தனுஷ் கோடி தபால் நிலையமும் திறக்கப் பட்டது.

மேலும் கடந்த 01.03.2019 அன்று தனுஷ்கோடிக்கு ராமேசுவரத்தில் இருந்து 17.20 கி.மீ தொலைவுக்கு ரூ.208 கோடியில் புதிய ரயில் பாதை அமைப்பதற்காக பிரத மர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். தற்போது முகுந்தராய சத்திரம் அருகே புதிதாக கலங் கரை விளக்கமும் அமைக்கப்பட உள்ளது.

இதுகுறித்து தனுஷ்கோடி பாரம் பரிய மீனவர் நம்புமாரி கூறிய தாவது: தனுஷ்கோடியில் கரை வலை மீனவர்கள் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வருகின் றனர். எங்களது 80-க்கும் மேற்பட்ட குழந்தைகள் இங்குள்ள நடுநிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியில் முறையான கட்டிடம், மின்சாரம், குடிநீர் வசதி இல்லை. தனுஷ்கோடி மீனவக் கிராமங்களில் கடந்த 55 ஆண்டு களில் மின்சாரம், ஆரம்ப சுகாதார நிலையம், பொதுக் கழிப்பிட வசதி கிடையாது.

மேலும் தனுஷ்கோடியில் புய லின்போது சேதம் அடைந்த தேவா லயம், அஞ்சல் நிலையம், துறை முகக் கட்டிடம், ரயில் நிலையக் கட்டி டங்கள் இடிந்து விழும் நிலையில் உள்ளன. எனவே, தனுஷ்கோடியில் அடிப்படை வசதிகளான மின்சாரம், மருத்துவம், குடிநீர் ஏற்படுத்தவும், சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக் கும் பழைய கட்டிடங்களை பாது காத்து பராமரிக்கவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x