Published : 17 Aug 2015 09:23 AM
Last Updated : 17 Aug 2015 09:23 AM

தனியார் வங்கி அதிகாரிகளை பொதுத்துறை வங்கி தலைவர்களாக நியமிக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு: வங்கி ஊழியர் சங்கம் விரைவில் ஆர்ப்பாட்டம்

தனியார் வங்கி அதிகாரிகளை பொதுத்துறை வங்கித் தலைவர் களாக நியமிக்கும் மத்திய அரசின் அறிவிப்புக்கு வங்கி ஊழியர் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித் துள்ளது.

இது குறித்து, அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

தனியார் துறை வங்கிகளில் தலைமைப் பதவி வகித்தவர் கள் பொதுத் துறை வங்கிகளில் மேலாண்மைஇயக்குநர், தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்படுவார் கள் என மத்திய நிதியமைச்சர் அறிவித்துள்ளார். இது பொதுத்துறை வங்கிகளின் செயல்பாட்டை சீர்குலைக்கும் நடவடிக்கையாகும். பொதுத்துறை வங்கிகள் பொதுமக்களுடைய சேமிப்பை நிர்வகிக்கும் மிகப் பெரிய நிதி அமைப்பாகும். பொதுத் துறை வங்கிகளில் பொதுமக்களு டைய வைப்புத் தொகை ரூ.66 லட்சம் கோடி உள்ளது.

மேலும், பொதுத்துறை வங்கி கள் லாபம் ஈட்டுவதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல் படவில்லை. மாறாக, சமூக நோக் கத்துடன் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், தலைமை பதவி களுக்கு தனியார் வங்கிகளில் இருந்து அதிகாரிகளை நியமிக்கும் போது பொதுத்துறை வங்கிகள் தங்கள் குறிக்கோளுடன் செயல்பட முடியாது. அத்துடன், பொதுத் துறை வங்கிகளிலேயே அர்ப்ப ணிப்பு உணர்வுடன் செயல்பட்டு வரும் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு கிடைக்காது.

கடந்த மார்ச் 31-ம் தேதி நிலவரப்படி, வங்கிகளின் வாராக் கடன் ரூ.2.97 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இதைத் தவிர, 530 கார்ப்பரேட் நிறுவனங்களின் வாராக் கடன் தொகை ரூ.4.03 லட்சம் கோடியாக உள்ளது. இதில், பொதுத்துறை வங்கிகளில் 30 வங்கிக் கணக்குகள் மூலம் பெறப்பட்ட வாராக் கடன் அளவு ரூ.1.12 லட்சம் கோடியாக உள் ளது. மத்திய அரசின் இந்த முடிவுகளைக் கண்டித்து விரைவில் நாடு தழுவிய அளவில் ஆர்ப்பாட்டங்கள் நடத் தப்பட உள்ளன.

இவ்வாறு வெங்கடாச்சலம் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x