Last Updated : 20 Dec, 2019 11:37 AM

 

Published : 20 Dec 2019 11:37 AM
Last Updated : 20 Dec 2019 11:37 AM

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் ரத்து:  உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக துணை வேந்தர் பாலசுப்பிரமணியனின் நியமனத்தை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தஞ்சாவூரைச் சேர்ந்த சேர்ந்த பேராசிரியர் ரவீந்திரன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்.

அதில்," தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக துணை வேந்தராக டாக்டர் ஜி.பாலசுப்பிரமணியன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அவரது நியமனத்தில் விதிமீறல் உள்ளது. உரிய கல்வித்தகுதி இன்றி, அவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். எனவே அவர் நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த மனு இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி வேலுமணி, தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பாலசுப்பிரமணியனின் நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x