Published : 17 Dec 2019 02:48 PM
Last Updated : 17 Dec 2019 02:48 PM

கோவையில் பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து விபத்து: மாணவரின் கால் எலும்பு முறிவு

இடிந்து விழுந்த சுவர்

கோவையில் பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் மாணவரின் கால் எலும்பு முறிந்தது.

கோவை ராமநாதபுரம் ஒலம்பஸ் பகுதி 80 அடி சாலையில் இயங்கி வரும் அரசு தொடக்கப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியின் பின்புறம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது.

இந்நிலையில், இன்று (டிச.17) மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவர் ஒருவர் சுவர் மீது ஏறி வெளியே செல்ல முயன்றார். அப்போது, தொடக்கப் பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து அந்த மாணவருக்குக் கால் முறிவு ஏற்பட்டது. இதனையடுத்து அந்த மாணவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்துத் தகவல் அறிந்த பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர். பள்ளியின் சுவர் இடிந்து விபத்து ஏற்பட்டது குறித்தும் விசாரித்தனர். மேலும், பள்ளிச் சுவர் விரிசல் ஏற்படக் காரணமான மரத்தை அகற்ற நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்து அந்தப் பள்ளி ஆசிரியர்கள் கூறும்போது, அரையாண்டு தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவர் தொடக்கப்பள்ளி அருகே அமைந்துள்ள மரத்தின் மீது ஏறி காம்பவுண்ட் சுவரைத் தாண்டி குதிக்க முயன்றபோது விபத்து ஏற்பட்டதாகவும் அதனை உடனடியாகச் சரியாக சரி செய்ய முயற்சிகள் மேற்கொள்ளபட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x