Published : 17 Dec 2019 10:17 AM
Last Updated : 17 Dec 2019 10:17 AM

விவேகானந்தர் மண்டப பொன்விழா: குடியரசுத் தலைவர் டிச. 25-ல் குமரி வருகை

விவேகானந்தர் மண்டப பொன்விழாவில் பங்கேற்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் டிசம்பர் 25-ம் தேதி கன்னியாகுமரி வருகிறார்.

கன்னியாகுமரியில் கடல் நடுவே உள்ள பாறையில் 1892-ம்ஆண்டு டிசம்பர் 25-ம் தேதிசுவாமி விவேகானந்தர் தியானம்செய்த இடத்தில், விவேகானந்தர் நினைவு மண்டபம் கட்டப்பட்டுள்ளது. ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளராக இருந்த ஏக்நாத் ரானடேஏற்பாட்டில் கட்டப்பட்ட விவேகானந்தர் மண்டபம், 1970 செப்டம்பர் 2-ம் தேதி திறக்கப்பட்டது.

விவேகானந்தர் மண்டபத்தின் பொன்விழா கடந்த செப்டம்பர் 2-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது.

இவ்விழாவில் பங்கேற்க டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து விவேகானந்தா கேந்திரா நிர்வாகிகள் அழைப்பு விடுத்தனர். இதையேற்று, விவேகானந்தா கேந்திரா வளாகத்தில் வரும் 25-ம் தேதி நடைபெறும் விவேகானந்தர் நினைவு மண்டப பொன்விழா நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்கிறார். இதற்கான ஏற்பாடுகளை விவேகானந்தா கேந்திரா நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x