Published : 16 Dec 2019 09:08 AM
Last Updated : 16 Dec 2019 09:08 AM

பல இடங்களில் போராட்டம் நீடிப்பதால் 8 விரைவு ரயில்கள் ரத்து

சென்னை

தெற்கு, கிழக்கு ரயில்வே பகுதிகளில் சில இடங்களில் போராட்டம் நடந்து வருவதால், தமிழகத்தில் இருந்து ஹவுரா உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்ல வேண்டிய 8 விரைவு ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:தெற்கு, கிழக்கு ரயில்வே பகுதிகளில் மக்கள் சிலர் போரட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சில இடங்களில் வன்முறை சம்பவங்களும் நடப்பதால், பயணிகளின் வசதியை கருத்தில்கொண்டுசில விரைவு ரயில்களின் சேவையில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னை - ஹவுரா (12840), மங்களூர் சென்ட்ரல் - சந்திரகாச்சி விவேக் விரைவு ரயில் (22852), புதுச்சேரி - ஹவுரா(06010) ரயில்களின் நேற்று முன்தின சேவைகளும் சென்னை - ஹவுரா கோரமண்டல் (12842), புரி - சென்னை சென்ட்ரல் விரைவு ரயில் (22859), சென்னை - புரிவிரைவு ரயில்கள் மற்றும் சென்னைசென்ட்ரல் - ஹவுரா (12840) மெயில் ரயில்களின் நேற்றைய சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இருப்பினும் கன்னியாகுமரி - ஹவுரா (1266), திருவனந்தபுரம் - சால்மார் (22641) உள்ளிட்ட சிலவிரைவு ரயில்களின் சேவையில் ஒரு பகுதி ரத்து செய்யப்பட்டன. சென்னை - புரி வாராந்திர விரைவு ரயில் (22860) இன்றைய சேவை (16-ம் தேதி) ரத்து செய்யப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x