Published : 14 Dec 2019 02:02 PM
Last Updated : 14 Dec 2019 02:02 PM

உள்ளாட்சித் தேர்தல்: கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதி பங்கீடு முடிந்த மாவட்டங்கள்: திமுக அறிவிப்பு

உள்ளாட்சித்தேர்தலில் கூட்டணிக்கட்சிகளுடன் தொகுதிப்பங்கீடு பேசி முடிக்கப்பட்ட மாவட்டங்கள், பேசி முடிக்கவேண்டிய மாவட்டங்கள் குறித்து திமுக தலைமை செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து திமுக தலைமை தெரிவித்துள்ள செய்திக்குறிப்பு:

“வருகிற டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய நாட்களில் நடைபெற உள்ள உள்ளாட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தி.மு.க. தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான கலந்தாலோசனை அந்தந்த திமுக மாவட்ட கட்சி செயலாளர்கள் சார்பில் நடைபெற்று வருகிறது. தற்போது வரை, பேச்சுவார்த்தை முடிந்த மாவட்டங்கள்.


* திருவண்ணாமலை வடக்கு,
* திருவண்ணாமலை தெற்கு,
* திருச்சி வடக்கு,
* திருச்சி தெற்கு,
* கரூர்,
* சேலம் மத்தி,
* சேலம் மேற்கு,
* கோவை தெற்கு,
* நீலகிரி,
* மதுரை வடக்கு,
* மதுரை தெற்கு,
* தூத்துக்குடி வடக்கு,
* தூத்துக்குடி தெற்கு,
* கன்னியாகுமரி கிழக்கு

ஆகிய கட்சி அமைப்பில் உள்ள மாவட்டங்களில் கூட்டணிக் கட்சியினருடன் சேர்ந்து சுமூக முடிவெடுக்கப்பட்டு, மாநில தலைமையின் ஒப்புதலோடு, அந்தந்த மாவட்டக் கட்சி அமைப்பு சார்பில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

மற்ற திமுக மாவட்ட செயலாளர்கள் சார்பில் தோழமைக் கட்சிகளிடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றது. விரைந்து அந்தந்த மாவட்டக் கழகங்கள் சார்பில் பட்டியல் வெளியிடப்படும்”.
இவ்வாறு திமுக தலைமை செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x