Published : 11 Mar 2014 12:00 AM
Last Updated : 11 Mar 2014 12:00 AM

யஷ்வந்த் சின்ஹாவுக்கு வைகோ திடீர் விருந்து: கௌரவமான எண்ணிக்கையில் தொகுதிகள் கிடைக்குமா?

மனித உரிமைகள் குறித்த கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காக திங்கள்கிழமை சென்னை வந்திருந்தார் யஷ்வந்த் சின்ஹா. அவருக்கு அண்ணா நகரில் உள்ள தனது வீட்டில் மதியம் சைவ விருந்து கொடுத்தார் வைகோ.

முன்னதாக வைகோ-வின் வீட்டுக்கு வந்த சின்ஹாவை வாசலில் வந்து வரவேற்றார் வைகோ. பாஜக நிர்வாகிகள் பொன்.ராதா கிருஷ்ணன், இல.கணேசன், மோகன்ராஜுலு உள்ளிட்டவர்களும் உடன் வந்திருந்தனர்.

பாஜக மற்றும் மதிமுக நிர்வாகிகள் உள்ளிட்ட சுமார் 100 பேர் இந்த விருந்தில் கலந்து கொண்டனர்.

நான்கு வகை கூட்டு, நெல்லை இருட்டுக்கடை அல்வா, போளி, ஐஸ்கிரீம் சகிதம் விருந்து பரிமாறப்பட்டது. விருந்தை முடித்துக் கொண்டு மதியம் சுமார் 3 மணிக்கு அங்கிருந்து கிளம்பினார் சின்ஹா, அவரை வாசல் வரை வந்து வழியனுப்பி வைத்தார் வைகோ.

யஷ்வந்த் சின்ஹாவின் நீண்ட நாள் நண்பரான வைகோ, `பாஜக கூட்டணியில் தொடக்கநிலை பார்ட்னராக சேர்ந்த மதிமுக-வுக்கு கௌரவமான எண்ணிக்கையில் சீட்கள் ஒதுக்கப்பட வேண்டும். நம் அனைவருடைய லட்சியமும் காங்கிரஸை வீழ்த்துவதில்தான் குறியாக இருக்க வேண்டும்’ என்றும் யஷ்வந்த் சின்ஹாவிடம் வலியுறுத்தியதாக மதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x