Published : 12 Dec 2019 02:16 PM
Last Updated : 12 Dec 2019 02:16 PM

குரூப்-1 நேர்முகத் தேர்வு திட்டமிட்ட தேதியில் நடக்கும்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

உள்ளாட்சித் தேர்தல் காரணமாக குரூப்-1 நேர்முகத் தேர்வு உள்ளிட்ட சில தேர்வுகள் தள்ளி வைக்கப்படவில்லை என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

“உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவிருப்பதை முன்னிட்டு 22.12.2019 முதல் 30.12.2019 வரை நடைபெறவிருந்த துறைத் தேர்வுகள் மட்டும் ஒத்திவைக்கப்பட்டு 05.01.2020 முதல் 12.01.2020 வரை நடைபெறும்.

மற்றபடி குரூப்-1 (தொகுதி – 1)- ல் அடங்கிய பதவிகளுக்கான நேர்காணல் தேர்வு திட்டமிட்டபடி 23.12.2019 முதல் 31.12.2019 வரை (25.12.2019 மற்றும் 29.12.2019 நீங்கலாக) தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறும்.

மேலும் திட்ட அலுவலர் (Project Officer) / உளவியலாளர் (Psychologist) மற்றும் சிறை அலுவலர் (Jailor) ஆகிய பதவிகளுக்கான எழுத்துத் தேர்வுகளும் திட்டமிட்டபடி 21.12.2019 மற்றும் 22.12.2019 ஆகிய இருநாட்களில் நடைபெறும்”.

இவ்வாறு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x